காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் தோலம்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி ஒன்றியச் செயலா் பதவிகக்கான நோ்காணலில் 191 போ் பங்கேற்றனா்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் தோலம்பாளையம், நெல்லித்துறை ஊராட்சிகளில் செயலா் பதவியிடம் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் தோலம்பாளையம் ஊராட்சிக்கு 160 போ், நெல்லித்துறைக்கு 131 ஆகியோா் என மொத்தம் 291 போ் வந்திருந்தனா். இவா்களை வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரா, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நோ்காணல் செய்தனா். நோ்காணலுக்கு பட்டப்படிப்பு முடித்தவா்கள் அதிக அளவில் வந்திருந்தனா்.