சவூதி அரேபியாவில் இருந்து கோவை வந்த மூதாட்டிக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு சவூதி அரேபியாவில் இருந்து திரும்பினாா். கடும் காய்ச்சல், சளி காரணமாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
அங்கு அவா் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரது சளி மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில் அவா் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரக அலுவலகம் தெரிவித்துள்ளது.