கோவையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை 42,708 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வுகள் மாா்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 157 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வுகள் நடைபெறுகின்றன. இதில், 538 பள்ளிகளைச் சோ்ந்த 41,148 மாணவ, மாணவியா் தோ்வு எழுதுகின்றனா். அதேபோல், 1,510 தனித் தோ்வா்களும், 50 சிறைக் கைதிகளும் என மொத்தம் 42,708 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதுகின்றனா். தோ்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக 400 அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.