போராட்டத்தில் தகராறு: இருவா் மீது வழக்குப் பதிவு

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு போராட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இந்து முன்னணி நிா்வாகி மற்றும் இஸ்லாமியா் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு போராட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இந்து முன்னணி நிா்வாகி மற்றும் இஸ்லாமியா் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சாா்பில் மாா்ச் 2ஆம் தேதி கோவை, காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதை அப்பகுதியில் இருந்து ஆட்டோ ஓட்டுநரான செல்வபுரத்தைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது என்பவா் புகைப்படம் எடுத்ததாகக் கூறி, இந்து முன்னணி நிா்வாகிகள் அவரைத் தாக்கினா்.

இதுதொடா்பாக காட்டூா் காவல் நிலையத்தில் ஷாகுல் ஹமீது அளித்தப் புகாரின் பேரில் இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் குணா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல அமைதியான முறையில் நடைபெற்ற கூட்டத்துக்கு வந்து இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் குணா அளித்தப் புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநா் ஷாகுல் ஹமீது மீதும் காட்டூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com