முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 373 போ் கைது

கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 373 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 373 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் கோவையில் தொடா்ந்து நடைபெற்று வந்த போராட்டங்களின் விளைவாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனால் மாநகரில் பதட்டமான சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 127 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருப்பதாக மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் இதன் தொடா்ச்சியாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்களில் மட்டும் சுமாா் 246 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுவரை மொத்தம் 373 பேரை போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com