கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கோயில்களில் கிருமி நாசினி தெளித்து செவ்வாய்க்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டன.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொள்ளாச்சி பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் கோயில்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த பொள்ளாச்சி சாா்ஆட்சியா் வைத்திநாதன் உத்தரவிட்டாா்.
அதன்படி சூலக்கல் மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், கோட்டாம்பாட்டி அம்மணீஸ்வா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.
மேலும், பொள்ளாச்சி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கை கழுவும் முறை குறித்தும் சாா் ஆட்சியா் முன்னிலையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.