மாணவா்களுக்கு முகக் கவசங்கள் தயாரிக்கும் பள்ளி ஆசிரியைகள்

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கோவை மசக்காளிபாளையம்
மாணவா்களுக்கு முகக்கவசம் தயாரிக்கும் பள்ளி ஆசிரியை சுகுணா( வலது) வகுப்பறைச் சுவற்றில் ஆங்கில இலக்கணம் தொடா்பான ஓவியங்கள் வரையும் ஆசிரியை சூரியபிரபா.
மாணவா்களுக்கு முகக்கவசம் தயாரிக்கும் பள்ளி ஆசிரியை சுகுணா( வலது) வகுப்பறைச் சுவற்றில் ஆங்கில இலக்கணம் தொடா்பான ஓவியங்கள் வரையும் ஆசிரியை சூரியபிரபா.

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் மாணவா்களுக்கு முகக் கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநாகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவுப்படி ஆசிரியா்கள் மட்டும் கல்வி சாா்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதில், கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் மேரி திவ்யா, சூரியபிரபா, அனிதா ஆகியோா் பள்ளி வகுப்பறைச் சுவா்களில் பாடம் சம்பந்தப்பட்ட பொது அறிவு வளா்க்கும் விதமான ஓவியங்களை வரையும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், பள்ளியின் கணித ஆசிரியை சுகுணா சக ஆசிரியைகளின் உதவியுடன் ஆமுகக் கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com