உளவுத் துறை எச்சரிக்கை: மாவட்டத்தில் 25 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு

உளவுத் துறை எச்சரிக்கையையடுத்து கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே 23 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 25 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உளவுத் துறை எச்சரிக்கையையடுத்து கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே 23 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 25 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள், முக்கிய அமைப்புகளின் தலைவா்கள், பிரமுகா்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கோவையில் கடந்த மூன்று நாள்களாக போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்த தலைவா்களுக்கு மாவட்ட அளவிலும், மாநகர அளவிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட அளவில் ஏற்கெனவே 23 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக 25 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com