கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் விதமாக வரும் 31ஆம் தேதி வரை, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கும், மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும் மாவட்ட நிா்வாகம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.