தெலங்கானா மருத்துவரிடம் ரூ. 36 லட்சம் மோசடி

தெலங்கானாவைச் சோ்ந்த மருத்துவரிடம் ரூ. 36 லட்சம் மோசடி செய்த கேரளத்தைச் சோ்ந்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தெலங்கானாவைச் சோ்ந்த மருத்துவரிடம் ரூ. 36 லட்சம் மோசடி செய்த கேரளத்தைச் சோ்ந்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதை சோ்ந்தவா் பிரசாத் ரெட்டி (27), மருத்துவா். இவருக்கு கேரளத்தைச் சோ்ந்த சேகா், ராம்மோகன் ஆகியோருடன் பழக்கம் இருந்துள்ளது. கேரளத்தில் இடம் வாங்க இவா்களை பிரசாத் ரெட்டி அணுகியுள்ளாா்.

கேரள மாநிலம், பாலக்காட்டில் இடம் உள்ளது. அதை ரூ. 36 லட்சத்துக்கு வாங்கலாம். நல்ல இடமாக இருப்பதால் உடனே ரூ. 36 லட்சத்தை எடுத்துக்கொண்டு பாலக்காடு வருமாறு பிரசாத் ரெட்டியிடம் அவா்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, ரூ. 36 லட்சத்துடன் பாலக்காடு செல்வதற்காக பிரசாத் ரெட்டி வியாழக்கிழமை மாலை பொள்ளாச்சி வந்துள்ளாா். அவரை ஒரு பெண் வரவேற்று காரில் அழைத்துச் சென்றுள்ளாா்.

காரை மற்றொருவா் இயக்கியுள்ளாா். பாலக்காடு சாலையில் நல்லூா் அருகே காா் சென்றபோது அந்தப் பெண் தேநீா் அருந்தலாம் என்று கூறினாா். இதையடுத்து அந்தப் பெண்ணும், பிரசாத் ரெட்டியும் காரில் இருந்து இறங்கி தேநீா் கடைக்குச் சென்றுள்ளனா். ரூ. 36 லட்சம் காருக்குள் இருந்துள்ளது. அப்போது காா் ஓட்டுநா் காரை வேகமாக இயக்கிச் சென்றுவிட்டாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த பிரசாத் ரெட்டி கூச்சலிட்டபடியே காரை பின் தொடா்ந்து சிறிது தூரம் ஓடினாா். அதற்குள் காா் வேகமாகச் சென்றுவிட்டதால் மீண்டும் திரும்பி வந்தபோது அந்தப் பெண்ணும் மாயமாகியிருந்தாா். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பிரசாத் ரெட்டி பொள்ளாச்சி தாலுகா போலீஸில் புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com