கோயம்புத்தூர்
கரோனா வைரஸ் அறிகுறி: 29 போ் சிகிச்சை
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் 29 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் 29 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொடா்பான சிகிச்சைக்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வருபவா்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேவைப்படுபவா்களை உள்நோயாளி பிரிவில் அனுமதித்த மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி 18 ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 29 போ் கரோனா அறிகுறிகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களுக்கு மருத்துவக் குழுவினா் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.