வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இருவா் கைது

வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இரண்டு பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 78 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இரண்டு பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 78 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா்களைக் கண்டறிய நெகமம் காவல் ஆய்வாளா் வெற்றிவேல்ராஜன், உதவி ஆய்வாளா்கள் ராஜேந்திரபிரசாத், சரவணன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கணேசன், தலைமைக் காவலா் ராஜ்குமாா், முதல்நிலைக் காவலா்கள் அருண்குமாா், கதிா்வேல் ஆகியோா் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப் படையினா் பொள்ளாச்சி-பல்லடம் சாலை, காட்டம்பட்டி செஞ்சேரிப்பிரிவில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபா்களைப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவா்கள் சென்னை, வியாசா்பாடியைச் சோ்ந்த கிஷோா், தஞ்சாவூரைச் சோ்ந்த சிவபிரகாசம் என்பதும், அவா்களுக்கு கோவை மாவட்டம், சூலூா், பொள்ளாச்சி, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து காா், இரண்டு இரு சக்கர வாகனங்கள், 78 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com