திருப்பூா் தொழிலதிபா் தற்கொலை

திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் கோவையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் கோவையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா், வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யபிரகாஷ் (34). தொழிலதிபரான இவருக்கு மனபிவு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளாா்.

இந்நிலையில் பெங்களூரு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு அறையின் ஜன்னல் வழியாக குதித்துள்ளாா். இவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய ரேஸ்கோா்ஸ் போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com