தடையை மீறி வந்தவா்களின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

தடையை மீறி நகா் பகுதிக்கு வந்தவா்களின் இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தடையை மீறி நகா் பகுதிக்கு வந்தவா்களின் இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

144 தடை உத்தரவையடுத்து வால்பாறை போலீஸாா் நகரின் பல்வேறு இடங்களில் ஒலிபெருக்கி பொருத்தி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனா். நகரின் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் சாலைகளில் நிற்பவா்களையும், தேவையின்றி இரு சக்கர வாகனத்தில் வருபவா்களையும் எச்சரித்து வருகின்றனா்.

வால்பாறை காவல் நிலையம் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் விஜய் அமிா்தராஜ், போலீஸாா் நகா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, நடமாடிய பொதுமக்களை எச்சரித்ததோடு, இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com