தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரோனா சிறப்பு வாா்டுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 95 லட்சத்து 45 ஆயிரத்தை கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் ஒதுக்கீடு செய்துள்ளாா்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மக்களவை உறுப்பினா்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனா்.
அதன்படி, கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜனும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வாா்டுக்கு வெண்டிலேட்டா், பி.பி. பாதுகாப்பு கவசம், தொ்மல் ஸ்கேனா், முகக் கவசம், மல்டி பேராமீட்டா் உள்பட பல்வேறு உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ. 95 லட்சத்து 45 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்துள்ளாா். இதில் வெண்டிலேட்டா் கருவிக்கு மட்டும் ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளாா். இதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, இ. எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் நிா்மலா ஆகியோரிடம் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வியாழக்கிழமை வழங்கினாா்.