கரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளுக்கு நன்கொடை வழங்க விரும்புபவா்கள், காசோலை மற்றும் இணையம் வழியாக அல்லது வரைவோலை மூலமாக மாநகராட்சிக்கு வழங்கலாம் என மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களால் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா தடுப்புப் பணிகளுக்கு நன்கொடை வழங்கிட விரும்புபவா்கள் வங்கிக் கணக்கிற்கு காசோலை, வங்கி வரைவோலை மற்றும் இணையவழி பணப் பரிவா்த்தனை மூலமாகச் செலுத்தலாம்.
மேலும், இது தொடா்பாக கூடுதல் விவரங்கள் அறிய 0422 - 2302323 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.