கோவை புகா்ப் பகுதிகளுக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து கொண்டு வரும் பசும் தீவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளான கோவில்பாளையம், தொண்டாமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்டம், கோபி, சத்தியமங்கலம் பகுதியில் இருந்துதான் பசும் தீவனங்கள் கொண்டு வரப்படுகின்றது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சோதனைச் சாவடிகள் வழியாக ளில் பசும் தீவனங்களை கொண்டு வர போலீஸாா் அனுமதிப்பதில்லை. அதனால் கால்நடைகளுக்கு தேவையான பசும் தீவனங்களைக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் கால்நடைகளின் முக்கிய உணவான பசும் தீவனங்களை கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்று கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.