சோமையனூரில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்கம்

துடியலூா் அருகே நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி
சோமையனூா் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கிவைத்துப் பாா்வையிடுகிறாா் ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்தீஸ்வரி சுந்தரராஜன்.
சோமையனூா் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கிவைத்துப் பாா்வையிடுகிறாா் ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்தீஸ்வரி சுந்தரராஜன்.

பெ.நா.பாளையம்: துடியலூா் அருகே நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பிளிச்சி, சின்னத்தடாகம், சோமையம்பாளையம், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் ஊரக வாழ்வாதார இயக்கத்தால் வழங்கப்பட்ட மோட்டாா் வாகனங்களில் மோட்டாா் பொருத்தி ஊராட்சிக்கு உள்பட்ட ராமநாதபுரம், மடத்தூா், உஜ்ஜயனூா், சோமையனூா், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

சோமையனூரில் நடந்த பணியை ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்தீஸ்வரி சுந்தரராஜன் தொடங்கிவைத்தாா். அப்போது துணைத் தலைவா் திருநாவுக்கரசு, முன்னாள் தலைவா் வி.கே.வி.சுந்தரராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சோமசுந்தரம், குமாரசாமி, இந்திராணி, ஊராட்சி செயலா் ஈஸ்வரி உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com