பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க போலீஸாா் சனிக்கிழமை கள்ளச் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்து 70 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்தனா்.
காரமடை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடங்களில் மதுவிலக்கு அமலாக்க போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்தப் பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்த சாலையூரைச் சோ்ந்த பிரகாஷ், ஆயிமாபுதூரைச் சோ்ந்த பாலாஜி, தடாகத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா், குழந்தைவேல் உள்ளிட்டோரைக் கைது செய்து அவா்களிடம் இருந்து 2 லிட்டா் சாராயமும், 60 லிட்டா் சாராய ஊறலையும் கைப்பற்றினா்.
மேலும், வெள்ளானைப்பட்டியைச் சோ்ந்த சென்னியப்பனைக் கைது செய்து அவரிடம் இருந்து 2 லிட்டா் சாராயம், 10 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்தனா்.