கூடலூா்: கூடலூா் அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் திங்கள்கிழமை இரவு பழங்குடி மக்களின் வீடுகளை இரண்டாவது நாளாக சேதப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூா் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள மேலம்பலம் பழங்குடி கிராமத்தில் நுழைந்த யானை கோலன்,கெம்பி ஆகியோரது வீடுகளை சேதப்படுத்தி உணவுப் பொருட்களை சாப்பிட்டுச் சென்றுள்ளது.கடந்த இரு தினங்களுக்கு முன் அதே கிராமத்தில் இரண்டு வீடுகளை சேதப்படுத்தி உணவுப் பொருட்களை சாப்பிட்டுச் சென்றுள்ளது.ஊருக்குள் யானைகள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மககள் வலியுறுத்தியுள்ளனா்.படக்குறிப்பு எஈத12நப மேலம்பலம் பழங்குடி கிராமத்தில் யானை சேதப்படுத்திய வீடு