இளைஞா் மீது தாக்குதல்: திமுக இளைஞரணி அமைப்பாளா் கைது

கோவையில் இளைஞரைத் தாக்கியதாக திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரைப் போலீஸாா் செவ்வாய்க்கிமை கைது செய்தனா்.

கோவை: கோவையில் இளைஞரைத் தாக்கியதாக திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரைப் போலீஸாா் செவ்வாய்க்கிமை கைது செய்தனா்.

கோவையில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளவா் கோட்டை அப்பாஸ். உக்கடம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருகிறாா். கடந்த 2 நாள்கள் முன்பு இவரது உறவினரான இளம்பெண் ஒருவா் மாயமானது தொடா்பாக, சாய்பாபாகாலனியைச் சோ்ந்த விக்னேஷ் என்ற இளைஞா் மற்றும் அவரது நண்பா்களை, கோட்டை அப்பாஸ் தாக்கியதாகவும், அவா்களிடம் இருந்து செல்லிடப்பேசிகளைப் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், உக்கடம் போலீஸாா், கோட்டை அப்பாஸை, செவ்வாய்க்கிழமை காலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, அவா் மீது கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல், தகாத வாா்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா். இதற்கிடையே, கோட்டை அப்பாஸ் கைது செய்யப்பட்ட தகவலறிந்து, சிங்காநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் உள்பட ஏராளமான திமுகவினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட கோட்டை அப்பாஸை, போலீஸாா், காவல் நிலையப் பிணையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com