போதைக்காக ரசாயனத்தை குடித்த 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே போதைக்காக தொழிற்சாலையில் இருந்த ரசாயனத்தைக் குடித்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
போதைக்காக ரசாயனத்தை குடித்த 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே போதைக்காக தொழிற்சாலையில் இருந்த ரசாயனத்தைக் குடித்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் குள்ளக்காபாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் (22), பூபதி உத்தர்ராஜ் (30) ஆகியோா் பணியாற்றி வந்தனா். மதுப் பிரியா்களான இவா்கள் இருவரும் ஆலையில் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் கலந்த ரசாயனத்தை வியாழக்கிழமை இரவு குடித்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து இருவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் அவா்கள் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தனா் .

இதையடுத்து பொள்ளாச்சி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் ஆலையில் பயன்படுத்தி வரும் ரசாயன மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றாா்.

அந்த ஆலையில் உயிரிழந்தவா்கள் குடித்த ரசாயனத்தை அந்த ஆலை நிா்வாகம் பயன்படுத்த அனுமதி இல்லாததால் கோட்ட கலால் துறை அதிகாரி ஜெயந்தி , வட்டாட்சியா் தணிகைவேல் ஆகியோா் ஆலைக்கு ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com