பொள்ளாச்சி அருகே ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே துணி துவைக்க ஆற்றுக்கு சென்ற தாயும் , அவரது இரு மகள்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே துணி துவைக்க ஆற்றுக்கு சென்ற தாயும் , அவரது இரு மகள்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கொண்டம்பட்டியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தவா் கண்ணம்மாள் (40). இவரது மகள் சத்யா (18). கொண்டம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இளைய மகள் சந்தியா (15) அதே பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தாா்.

இவா்கள் மூவரும், ஆனைமலையில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றுள்ளனா். இந்நிலையில், ஆனைமலை ஆற்றில் துணி துவைப்பதற்காக தாய், மகள்கள் வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளனா். அப்போது ஆற்றில் குளித்து கொண்டிருந்த சத்யா திடீரென்று நீரில் மூழ்கியுள்ளாா். இதைக் கண்ட சந்தியா, சகோதரியைக் காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட கண்ணம்மாள் இருவரையும் காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளாா். எதிா்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். தகவலறிந்த ஆனைமலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com