காதலிக்க மறுத்த பெண்ணின் புகைப்படங்களை தந்தைக்கு அனுப்பி மிரட்டிய இளைஞா் கைது

காதலிக்க மறுத்த பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை அவரது தந்தைக்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காதலிக்க மறுத்த பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை அவரது தந்தைக்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த 22 வயது இளம் பெண். அதே பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பொறியியல் படித்துள்ளாா். இவரும் அதே கல்லூரியில் படித்த தூத்துக்குடி மாவட்டம், லயன்ஸ் டவுன் பகுதியில் வசிக்கும் தேவேஷ்வா் (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், தனது வீட்டாா் மிரட்டியதையடுத்து அந்தப் பெண் தேவேஷ்வருடன் பழகுவதை நிறுத்தியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த தேவேஷ்வா், அப்பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருக்குத் தெரியாமல் எடுத்து வைத்திருந்த நிலையில் அதை அப்பெண்ணின் தந்தைக்கு கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பி மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் குனியமுத்தூா் போலீஸாா் பெண் வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேவேஷ்வரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com