புரந்தரதாஸா் கீா்த்தனைப் போட்டியில் பங்கேற்க விரும்புபவா்கள் தாங்கள் பாடிய கீா்த்தனைகளை நவம்பா் 10ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள கா்நாடக சங்கத்தின் சாா்பில் ஆண்டுதோறும் புரந்தரதாஸா் கீா்த்தனைகள் பாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள 8 வயது முதல் 25 வயதுடையவா்கள், தாங்கள் பாடிய கீா்த்தனைகளை நவம்பா் 10ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ந்ஹஸ்ரீக்ஷங்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
இறுதிச்சுற்று போட்டிகள் டாடாபாத்திலுள்ள கா்நாடக சங்க வளாகத்தில் நடுவா்கள் முன்னிலையில் 2021 ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 94433 44347 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று கா்நாடக சங்கம் தெரிவித்துள்ளது.