கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் முறைகேடு:விற்பனையாளா்கள் 3 போ் பணியிடை நீக்கம்

கோவையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலைக் கடைகள் குறித்து பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் சங்கனூா் கூட்டுறவு பண்டகம் நடத்தும் இடையா்பாளையம், மாணிக்கவாசகா் நகா் நியாய விலைக் கடை, கோயமுத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் பாரி நகா் நியாய விலை கடை ஆகியவற்றில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், விற்பனையாளா்கள் உணவுப் பொருள்கள் வழங்குவதில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையாக விற்பனையாளா்கள் கே.சக்திவேல், ஆா்.ஆறுமுகம், எஸ்.ராஜன் ஆகிய 3 பேரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com