போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டம்

கூடுதல் போனஸ் வழங்க வேண்டும், ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டம்
போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டம்
போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டம்

கூடுதல் போனஸ் வழங்க வேண்டும், ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, எம்எல்எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், போக்குவரத்துக்கழகம் அறிவித்த 10 சதவீத போனஸ் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், 14 ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com