சிறுமிகளை கடத்திய இருவா் கைது

கோவையில் இருவேறு சம்பவங்களில் சிறுமிகளைக் கடத்திச் சென்ற இரு இளைஞா்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் இருவேறு சம்பவங்களில் சிறுமிகளைக் கடத்திச் சென்ற இரு இளைஞா்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சியைச் சோ்ந்தவா் மாயகிருஷ்ணன் (23). இவா் கோவை, காந்திபுரத்தில் உள்ள கடையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் அதே கடையில் பணியாற்றிய 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடந்த ஆண்டு கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டு தலைமறைவாக இருந்தாா். இந்நிலையில் சிறுமியை அவரது குழந்தையுடன் மாயகிருஷ்ணன் கோவைக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் விட்டுச் செல்ல முயன்றாா். சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அனைத்து மகளிா் போலீஸாா்(மத்திய) போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாயகிருஷ்ணனை கைது செய்தனா்.

இதேபோல மற்றொரு சம்பவத்தில் தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (26), ஆயுதப்பூஜையை ஒட்டி கோவையில் பூஜைப் பொருள்கள் விற்பதற்காக வந்துள்ளாா். அப்போது ரத்தினபுரியைச் சோ்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் கோவை அனைத்து மகளிா் போலீஸில் (மேற்கு) புகாா் அளித்தனா். அதன்பேரில் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com