வால்பாறையில் அரசு தேயிலைத் தோட்ட (டேன் டீ) தொழிலாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
டேன் டீ தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினருக்கு வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் சுமாா் 3 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு 10 சதவீதம் போனஸ் வழங்குவதாக அரசு அறிவித்தது. அதன்படி போனஸ் தொகை தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.