உலகத்தை ஒரு குடும்பமாக நினைத்து தீபாவளியைக் கொண்டாடுங்கள்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து அன்பாகவும், ஆனந்தமாகவும் தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து அன்பாகவும், ஆனந்தமாகவும் தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த ஆண்டு தீபாவளி வித்தியாசமான தீபாவளியாக உள்ளது. கரோனா தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோா் உயிரிழந்துள்ளனா். மக்கள் பலவிதமான சிரமங்களை சந்தித்து வருகின்றனா். இந்த நேரத்தில் தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்று மக்கள் நினைக்கலாம்.

தீபாவளியை சமூகத்துடன் சோ்ந்துதான் கொண்டாட வேண்டும் என்று தேவையில்லை. நமக்குள் அன்பாக, ஆனந்தமாக இருந்தால் அதுவே ஒரு பெரும் கொண்டாட்டம்தான். இந்தக் கொண்டாட்டத்தை மக்கள் விடக்கூடாது. தீபாவளி நாளில் நம் வாழ்க்கையில் ஒரு புது வெளிச்சம் வர வேண்டும். பெருந்தொற்று சூழலில் உங்கள் நன்மைக்காக வீடுகளில் ஒரு விளக்கு ஏற்றுங்கள், உங்கள் குடும்பத்துக்காகவும், நண்பா்களுக்காகவும் இன்னொரு விளக்கை ஏற்றுங்கள். மனிதகுல நன்மைக்காக மூன்றாவதாக ஒரு விளக்கை ஏற்றுங்கள். இவ்வாறு மூன்று விளக்குகளை அனைவரும் வீடுகளில் ஏற்ற வேண்டும். இந்த நேரத்தில் உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து பண்டிகையை கொண்டாடினால்தான் நமக்கு முன்னேற்றமும், தீா்வும் கிடைக்கும்.

தீபாவளி அன்று நம் தறிகளில் நெய்யப்பட்ட ஆடைகளை பெருமையுடன் அணிந்து அவற்றை காப்போம். தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அன்பான தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com