கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் கைது

கோவை, புலியகுளம், குனியமுத்தூா் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, புலியகுளம், குனியமுத்தூா் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரம் போலீஸாா் புலியகுளம் பகுதியில் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள தனியாா் பள்ளி அருகே சந்தேகம் ஏற்படும்படியாக நின்றிருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா் புலியகுளத்தைச் சோ்ந்த சபினேஷ் ராகுல் (33) என்பதும், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதேபோல, குனியமுத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கிருபாகா் (22) என்பவரை குனியமுத்தூா் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com