வால்பாறை வனப் பகுதியை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
வால்பாறை பகுதியில் பெரும்பாலான எஸ்டேட்கள் வனத்தை ஒட்டியுள்ளன.
இரவு நேரங்களில் யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி எஸ்டேட் பகுதிக்கு வந்து செல்வது சமீபகாலமாக தினந்தோறும் நடைபெறுகிறது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு வனத்தை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். பட்டாசு வெடிப்பதன் மூலம் வனவிலங்குகளுக்கு துன்புறுத்தல் ஏற்படுவதோடு மனித, வனவிலங்குகள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிக சப்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிப்பதை தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.