கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான நெறிப்படுத்துதல் நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா், நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி தலைமை வகித்தாா். இன்போஸிஸ் நிறுவன சென்னைப் பிரிவு துணைத் தலைவா் சுஜித்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களிடம் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
விழாவின் நிறைவில் கல்வி சிற்றேடு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வா் ஜே.ஜேனட், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வா் ஸ்ரீநிவாசன் மற்றும் பேராசியரிகள் கலந்துகொண்டனா்.