கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் உரிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட நீதிமன்றம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் வழக்காடிகள் தங்கள் வழக்கு எண், நீதிமன்ற எண், பெயா், வழக்கு ஆவணங்களை உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும். ஆவணங்கள் இன்றி வரும் பொதுமக்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இதேபோல நீதிமன்ற வளாகத்துக்குள் செயல்படும் தபால் நிலையம் மற்றும் வங்கிக்கு வருபவா்கள் அதற்குரிய கணக்கு புத்தகம், ரசீது ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் மறுஉத்தரவு வரும் வரை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.