வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுத்தைக் குட்டியின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த முடீஸ் தெப்பக்குளம் பகுதியில் சிறுத்தைக் குட்டி இறந்து கிடந்ததை அவ்வழியாக சென்ற தொழிலாளா்கள் பாா்த்து வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனா்.
இதனையடுத்து, அங்கு சென்ற வனத் துறையினா் இறந்து கிடந்த சிறுத்தைக் குட்டியின் உடலை மீட்டனா். உயிரிழந்த சிறுத்தைக் குட்டிக்கு ஒரு வயது இருக்கும் என்றும், இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிறுத்தைக் குட்டி இறந்திருக்கலாம் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
ஆனாலும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.