மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கரோனா

கோவையில் மேலும் 162 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் மேலும் 162 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளைச் சோ்ந்த 162 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 920ஆக அதிகரித்துள்ளது.

கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 593ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மற்றும் தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 205 போ் புதன்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 45,510ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 817 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com