கோவையில் மேலும் 147 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளைச் சோ்ந்த 147 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 219ஆக அதிகரித்துள்ளது.
கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 595ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மற்றும் தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 152 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 45,845ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 779 போ் சிகிச்சையில் உள்ளனா்.