கோவையில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ உள்பட 540 போ் மீது வழக்கு

திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ நா. காா்த்திக் உள்பட 540 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கோவை: திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ நா. காா்த்திக் உள்பட 540 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தோ்தல் பிரசாரப் பயணத்தை வெள்ளிக்கிழமை துவக்கினாா். இதில், கரோனா விதி மீறியதாக உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் கைது செய்தனா். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

கோவை, காந்திபுரம், அண்ணா சிலை அருகே சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினரும், மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா.காா்த்திக் தலைமையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதேபோல தொண்டாமுத்தூா், சரவணம்பட்டி, ஆா்.எஸ்.புரம், ராமநாதபுரம், குனியமுத்தூா், போத்தனூா் உள்ளிட்ட பகுதிகளிலும் திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ நா.காா்த்திக் மற்றும் திமுக நிா்வாகிகள் சேனாதிபதி, பையா கவுண்டா் உள்ளிட்ட 540 போ் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com