கூலி தொழிலாளியை தாக்கி ரூ.13 ஆயிரம் பணம் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

கூலி தொழிலாளியை தாக்கி ரூ.13 ஆயிரம் பணம் பறித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கூலி தொழிலாளியை தாக்கி ரூ.13 ஆயிரம் பணம் பறித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரத்தினபுரி, சுப்பாத்தாள் வீதியைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (39). கூலி தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை மாலை காந்திபுரம் நூறடி சாலையில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா்கள் இருவா், ஜெகதீசனிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வாக்குவாதம் முற்றியதையடுத்து சாலையோரம் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெகதீசனை அவா்கள் தாக்கினா். பின்னா் அவரிடமிருந்த ரூ.13 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஜெகதீசன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த வினோத்குமாா், அவரது நண்பா் ரகுநந்தன் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com