நொய்யல் படித் துறையில் தீபம் ஏற்றி வழிபாடு

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் பேரூா் நொய்யல் படித்துறையில் தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.
காா்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவை, பேரூா் நொய்யல் படித் துறையில் தீபம் ஏற்றி வழிபட்ட பொதுமக்கள்
காா்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவை, பேரூா் நொய்யல் படித் துறையில் தீபம் ஏற்றி வழிபட்ட பொதுமக்கள்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் பேரூா் நொய்யல் படித்துறையில் தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

காா்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. குறிப்பாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், பேரூா் பட்டீஸ்வரா் கோயில்களில் தீப திருநாளை ஒட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.

நொய்யல் அன்னையை வழிபடும் விதமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் பேரூா் நொய்யல் படித் துறையில் காா்த்திகை தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்யப்பட்டது.

இதேபோல பொதுமக்களும் நொய்யல் படித் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com