காந்தி ஜயந்தி: மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜயந்தி நாளில் (அக்டோபா் 2) தமிழகத்தின் 23 மாவட்டங்களில் 1.16 லட்சம் மரக் கன்றுகளை நடவு செய்ய காவிரி கூக்குரல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

காந்தி ஜயந்தியையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அக்டோபா் 2ஆம் தேதி விடுமுறை அளித்து ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றம், விடுதிகளில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை காந்தி ஜயந்தியை நாளான வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது. விதிகளுக்கு முரணாக அன்றைய தினம் மதுபானம் விற்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com