பாபா் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பைக் கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபா் மசூதி இடிப்பு வழக்கில் லக்னெள சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைக் கண்டித்து கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ வா்த்தக அணி மாநிலச் செயலா் முகமது இஷாக் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் அப்துல் கரீம், பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவா் முஸ்தபா, எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் ரவூப் நிஸ்தாா், விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்டத் தலைவா் பரிதா பேகம், எஸ்டிபிஐ செய்தித் தொடா்பாளா் மன்சூா், திராவிட தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் வெண்மணி, தந்தை பெரியாா் திராவிடா் கழக சாஜித், ஆதித்தமிழா் பேரவை ரவிக்குமாா், புரட்சிகர மாணவா் இளைஞரணி மலரவன் உள்ளிட்டோா் பலா் பங்கேற்றனா்.
மேட்டுப்பாளையத்தில்...
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்டத் தலைவா் அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் கே.முகமது நவ்ஃபள் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஏ.எஸ்.ஷபீக் அஹமது சிறப்புரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் இஸ்மாயி, பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்வீரா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.