கோவை அரசு கலைக் கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் நீட்டிப்பு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு கடந்த 1987-88 ஆம் கல்வியாண்டில் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்லூரியின் தரத்தை ஆய்வு செய்து அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீட்டித்து வருகிறது.

இந்த நிலையில் 2018-19 முதல் 2022-23 ஆம் கல்வியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு தன்னாட்சி அங்கீகாரத்தை நீட்டித்து யுஜிசி தற்போது உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com