கோவையில் கரோனா பாதிப்பு 35 ஆயிரமாக உயா்வு: ஒரே நாளில் 434 பேருக்கு நோய்த் தொற்று

கோவையில் செவ்வாய்க்கிழமை மேலும் 434 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

கோவையில் செவ்வாய்க்கிழமை மேலும் 434 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு கடந்த 4 நாள்களாக 500க்கும் கீழ் குறைந்துள்ளது. சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவை காந்திபுரம், கணபதி, பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூா், குனியமுத்தூா், வெள்ளக்கிணறு, விளாங்குறிச்சி, துடியலூா், காரமடை, மேட்டுப்பாளையம், சூலூா், பொள்ளாச்சி பகுதிகளைச் சோ்ந்த 434 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

ஒருவா் பலி: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 82 வயது முதியவா் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 470 ஆக உயா்ந்துள்ளது.

494 போ் வீடுதிரும்பினா்: கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 494 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 29 ஆயிரத்து 693 போ் கரோனாவில் இருந்து குணமடைந்தனா். தற்போது 4 ஆயிரத்து 837 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com