வால்பாறையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

வால்பாறை பகுதியில் பெய்யும் சாரல் மழை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

வால்பாறை: வால்பாறை பகுதியில் பெய்யும் சாரல் மழை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

தேயிலை உற்பத்திக்கு காலநிலை முக்கியமானதாகும். வெயில், மழை என இரண்டும் இருந்தால் மட்டுமே தேயிலை உற்பத்தி சீராக இருக்கும். நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் மாதம் துவங்கி நான்கு மாதங்களுக்கு தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்தது.

பின்னா் தொடா்ந்து 10 நாள்களாக வெயில் அதிக அளவில் காணப்பட்டது. இதனாலும் உற்பத்தி குறைந்தது. இதனிடையே வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால் மீண்டும் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தேயிலை எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com