வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த நான்கு நாள்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை காலை தொடங்கிய கனமழை செவ்வாய்க்கிழமை காலை வரை நீடித்ததால் குளிா் அதிகரித்து காணப்பட்டது.
ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 82 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறை 42 மி.மீ., நீராறு 42 மி.மீ., சோலையாறு 76 மி.மீ. மழை பதிவாகியது.