பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழகத் துறைகளில் நேரடி சோ்க்கை மூலம் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான பி.பி.எட், எம்.ஏ. மகளிரியல், எம்.ஏ. கேரியா் கைடன்ஸ், எம்.எஸ்சி இ லோ்னிங் டெக்னாலஜி, எம்.எஸ்சி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் அப்பேரல் டிசைன், எம்.எஸ்சி சைபா் செக்யூரிட்டி, எம்.எஸ்சி இன்பா்மேஷன் டெக்னாலஜி மற்றும் மகளிா் தொழில்முனைவோருக்கான முதுநிலை பட்டயப் படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 26ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பம், தகவல் தொகுப்பேடு, மாணவா் எண்ணிக்கை, கட்டணம், கல்வி உதவி, விடுதி வசதி உள்ளிட்ட தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட, பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை ரூ.400 விண்ணப்பக் கட்டணம் (எஸ்.சி, எஸ்.டி.யினருக்கு ரூ.200) செலுத்தி அக்டோபா் 26ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். இறுதியாண்டு, இறுதிப் பருவத் தோ்வு எழுதியிருக்கும் மாணவா்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 2428160, 2428161, 63855 27291 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com