பொதுமுடக்க காலத்தில் ரயில் முன்பதிவு: கோவையில் ரூ.5.50 கோடி திருப்பியளிப்பு

பொதுமுடக்க காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவா்களுக்கு கோவை ரயில் நிலையங்கள் மூலம் ரூ.5.50 கோடி கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்க காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவா்களுக்கு கோவை ரயில் நிலையங்கள் மூலம் ரூ.5.50 கோடி கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக மாா்ச் 24ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதில் கோவையில் இருந்து வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளில் இ- டிக்கெட் பெற்றவா்கள் கட்டணத் தொகையை அவா்களின் வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்பட்டது.

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக மாா்ச் 22ஆம் தேதிக்குப் பிறகு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவா்களுக்கு, அந்தந்த மையங்களிலேயே கட்டணத் தொகை திருப்பி தரப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை ரயில் நிலைய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை, வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஜூன் 4ஆம் தேதி முதல் செப்டம்பா் மாதம் வரை 4 மாதங்களில் கோவை ரயில் நிலையத்தில் ரூ.4 கோடியும், வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூா் ரயில் நிலையங்களில் ரூ.1.50 கோடியும் என மொத்தம் ரூ.5.50 கோடி முன்பதிவு கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை முன்பதிவு செய்தவா்களில் 90 சதவீத பயணிகளுக்கு கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது. பயண தேதியில் இருந்து 180 நாள்களுக்குள் கட்டணத் தொகையை திரும்பப் பெறலாம். இதில் ரூ.20 மட்டும் சேவைக் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com