கோவையில் அக்டோபா் 16ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் அக்டோபா் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா பாதிப்பால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் விவசாயிகளின் நலன் கருதி ஆன்லைன் மூலம் அக்டோபா் 16ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிா்வாக காரணங்களால் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் அக்டோபா் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் அக்டோபா் 23ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.