கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, ஹேக் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்துக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி கணினியா்புலம் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டு மையம் இணைந்து ஹேக் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வா் மற்றும் செயலா் பி.எல்.சிவகுமாா், ஹேக் ஆஃப் டெக்னாலஜி நிறுவனா் தினேஷ் பராந்தகன் ஆகியோா் முன்னிலையில் கையெழுத்து இடப்பட்டது.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் கல்லூரியில் இன்குபேஷன் மையம் தொடங்கப்பட்டு கல்லூரி மாணவா்கள் படிக்கும் போதே ஊதியத்துடன் கூடிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வி சூழலிலும், ஆராய்சியிலும் புதுமைகள் உருவாக்கித் தரப்படும் என்று தெரிவித்துள்ளனா்.